Friday, May 28, 2010

sahana heart

_________SAHANASA____________SAHANASAH
______SAHANASAHANASA_______SAHANASAHANASAHA
____SAHANASAHANASAHANAS___SAHANASAHANASAHANAS
___SAHANASAHANASAHANASAHANASAHANASA_______SAHA
__SAHANASAHANASAHANASAHANASAHANASA_________SAHA
_SAHANASAHANASAHANASAHANASAHANASAHANA_______SAHA
_SAHANASAHANASAHANASAHANASAHANASAHANASAHA______S
SAHANASAHANASAHANASAHANASAHANASAHANASAHANASA__SAH
SAHANASAHANASAHANASAHANASAHANASAHANASAHANASAHAN_S
SAHANASAHANASAHANASAHANASAHANASAHANASAHANASAHANAS
SAHANASAHANASAHANASAHANASAHANASAHANASAHANASAHANAS
_SAHANASAHANASAHANASAHANASAHANASAHANASAHANASAHAN
__SAHANASAHANASAHANASAHANASAHANASAHANASAHANASAH
____SAHANASAHANASAHANASAHANASAHANASAHANASAHANA
______SAHANASAHANASAHANASAHANASAHANASAHANAS
_________SAHANASAHANASAHANASAHANASAHANAS
____________SAHANASAHANASAHANASAHANAS
______________SAHANASAHANASAHANASA
_________________SAHANASAHANAS
___________________SAHANASAH
_____________________SAHANA
______________________SAHA

உனக்கான என் கவிதைகள்




எங்கோ நீயும்..
படித்துக் கொண்டிருப்பாய்...
என்ற நம்பிக்கையிலேயே..
பிறக்கின்றன...
உனக்கான என் கவிதைகள்

உன் விட்டிற்கு நான் வந்த போது ...




யாருக்கும் தெரியாமல்
உன்னை பார்க்க உன் விட்டிற்கு
நான் வந்த போது ...


உன் வீட்டு கோலம் சொன்னது...
"நீ எதையோ கிறுக்கிவிட்டு
கவிதை என்கிறாய் !
ஒரு கவிதை கிறுக்கிய
கிறுக்கல் நான் "என்றது..

உன் வீட்டு அழைப்புமணி சொன்னது..
"அவள் அபூர்வமாய் மீட்டும் வீணை நான்." என்றது

உன் வீட்டு மிதியடி சொன்னது.

"மதி அவள் மிதிக்கும் மதியடி நான் " என்றது

உன் வீட்டு நாய்குட்டி சொன்னது.

"செல்ல பிராணி அல்ல நான்
உன் செல்லம் வளர்க்கும் பிராணி நான்" என்றது ..

உன் வீட்டு பூச்செடி சொன்னது.

"ஒரு பூ வளர்க்கும் பூச்செடி நான் " என்றது ..

உன் வீட்டு மொட்டைமாடி சொன்னது.
"அவள் அழகை ரசிக்க வரும் நிலவையும் மழையையும் விரட்டும் காவலன் நான்"என்றது ..

உன் வீட்டு பூஜை அறை சொன்னது..
"கோவிலில் சிறு அறை நான்" என்றது

உன் வீட்டு படுக்கையறை சொன்னது.
"அவள் தூங்குவதை பார்த்தே தூக்கம் தொலைத்தவன் நான்" என்றது ..

உன் வீட்டு சமயலறை சொன்னது.
"உணவு பொருட்களை சொர்க்கம் அனுப்பும் சொர்க்க வாசல் நான்" ..என்றது ..

உன் வீட்டு குளியலறை சொன்னது....
"உண்மையில் அழகில் குளிப்பவன் நான்" என்றது

இவையெல்லாம் திடிரென
நீ யார் என்றது..
எதுவும் சொல்லாமல் வந்துவிட்டேன்..
எப்படி சொல்வேன் அவைகளிடமிர்ந்து
உன்னை பிரித்து செல்ல வந்தேன் என்று..

வானவில்



வீட்டு மொட்டை மாடியில்
உன் சுடிதார் துப்பட்டாவை காய வைக்காதே.
வானவில் என நினைத்து
சிறுவர்கள் கூட்டம் உன் வீட்டை சூழ்ந்தால் என்ன செய்வாய் .......

இதயம் துடிப்பது




என் இதயம் துடிப்பது தாயால்..
அது துடியாய் துடிப்பது உன்னால் .

ஆத்திசுடி




கல்வித்துறை என்வசம் இருந்தால்...
உன் கல்லூரி பாடப்புத்தகத்தில்
ஆத்திசுடியை சேர்த்திருப்பேன்
"காதல் செய்ய விரும்பு " என வரிகளை மாற்றி ..

எட்டப்பனாய் உன் கண்கள்




நீ கட்டபொம்மன் போல்..
என்னை காதலிக்க மாட்டேன் என்கிறாய் ...
உன் கண்கள் எட்டப்பனாய்..
உன் காதலை என்னக்கு காட்டி கொடுகிறதே....

அழகைமறைக்கிறாய்..




நீ உன் அழகை கைகளால் மறைக்கிறாய்..
அது பேரழகாக மாறி என்னை வதைக்கிறது .....

ஏசுநாதர் நினைவிற்கு வருகிறார்



ஏசுநாதர் நினைவிற்கு வருகிறார்..
நீ என் ஒரு கன்னத்தில் முத்தமிடும் போது...
நீ நினைவிற்கு வருகிறாய்
ஒரு குழந்தை எனக்கு முத்தமிட்ட போது...

ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்




அன்று என் ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்
உனக்கு யாரை பிடிக்கும் என்றார்
'அம்மா' என்றேன்
இன்று கேட்டால்
பதில் சொல்லாமல் உதைவாங்கி இருப்பேன்..

அன்று என் ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்
ஒருமைக்கு உதாரணம் கேட்டார்
'நிலா' என்றேன்
இன்று கேட்டால்
"நீ" என்று சொல்லியிருப்பேன் ....

ஏன் இவ்வளவு பொறமை





உன் முகத்தின் மீது உன் கண்களுக்கு ஏன் இவ்வளவு பொறமை
ஒரு முறை கூட உன் முகத்தை பார்க்க என்னை விடுவதில்லையே ...

யாராவது நினைத்தால்




"யாராவது நினைத்தால் பொறை ஏறுமாம் "
உண்மையா என்கிறாய் ..
அது பொய் என்று உனக்கு நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா ?

உனக்கு யாரை பிடிக்கும்




முதல் முறை ஒரு பதில் கேள்வி கேட்பதாய் உணர்கிறேன் ...
"உனக்கு யாரை பிடிக்கும்' என்று நீ கேட்கும் தருணங்களில் ..

ஒற்றை கருவில் ஓராயிரம் குழந்தை




ஒற்றை கருவில்
ஓராயிரம் குழந்தை பெற்றேன் ...
அதற்கு கவிதை என்று பெயரிட்டேன்..
காரணம் உன் கண்கள் என்று மட்டும் ஏனோ உன்னிடம் சொல்ல மறந்தேன்..

நானும் வண்டும்


என்னை போல் வண்டும் ஏமார்ந்தது..
அசையாத உன் உதடுகள்..

உன் பிறந்தநாளில்



உன் பிறந்தநாளில் நீ தரும் இனிப்பை ஏற்க என் இதயம் மறுக்கிறது
நீ பிறக்கும்போது இந்த நாளில் அழுது இருப்பாய் என்று ..

மதிப்பெண்



பாடபுத்தகத்தின் முதல் பக்கத்தில்
உன் பெயரை எழுதி
அதை கவிதை புத்தகமா மாற்றிய மதி பெண்ணே ...
உனக்கு மதிப்பெண் பற்றி கவலை எதற்கு ?

கண்ணீர் என்றால் என்ன?




என் விரலை பிடிக்கும் முன் ..
ஒரு முறையேனும் அழுது விட்டுவா...
என்றாவது ஓர்நாள் நம் குழந்தை
கண்ணீர் என்றால் என்ன? என்று கேட்டால் என்ன சொல்வாய்..

கேள்விகள் ஆயிரம்....




எனக்கு பதில் தெரியாத கேள்விகள் ஆயிரம்....
நான் பதில் சொல்லமுடியாத ஒரே கேள்வி
"நான் இல்லை என்றால் ?"
நீ கேட்கும் போது மட்டும்...

பரிசு





நான் கண்ட கனவுகளை கொண்டு
உனக்கு பரிசளிக்க சொன்னால் ...
கண்ணாடி மளிகை தருவேன் ...
கனவில் எல்லாம் உன் பிம்பமே ......

நான் அரசவை புலவனாய் இருந்திருந்தால்.
நான் அரசவை புலவனாய் இருந்திருந்தால்..
உன் பெயரை சொல்லியே
பொற்காசுகள் வங்கி இருப்பேன்...
அழகை பற்றி ஆயிரம் கேள்விகள் எழுந்தாலும்.


மழையில் நனையாதே



மழையில் நனையாதே
பிரம்மன் தன்னை அறியாமல் படைத்த அழகை..
கரைக்க முயற்சிக்கிறான்....

உனக்கு மட்டும் தனியிடம்..




என் வாழ்வில் உனக்கு மட்டும் தனியிடம்..
நான் விரும்பியது எல்லாம் கிடைக்க..
கிடைக்காத ஒரே ஒரு பொருளாய் நீ !

தேவதைகள்



"தேவதைகள் வெண்ணிற ஆடைகள் உடுத்துமாம்"..
உண்மையா என்றேன் ...
ஒன்றுமே சொல்லாமல் சிரித்துவிட்டு சென்றாய்..
நீல நிற சுடிதாரில் வந்து...

மழையை பிடிக்கவில்லை ..



மழையை பிடிக்கவில்லை ..
உன் வீட்டு குடை நனைவதால் ....

Monday, May 3, 2010

பிடிக்காது:






உனக்கு பிடித்ததை மட்டுமே செய்யும்
பிடிக்காதவன் நான்..
என்னை பிடிக்காது என்று தெரிந்தும்
எனக்கு பிடித்தவள் நீ !

குழந்தையாய் நீ !






ஒருவயது குழந்தையாய் நீ !
அதன் கையில் கிடைத்த
ரூபாய் நோட்டாய் என் காதல்!


என் படைப்பில் அழகு:




நான் கனவுலகில் பிரம்மலோகம் சென்ற போது
அங்கு "என் படைப்பில் அழகு" என்ற புத்தகத்தை பார்த்தேன் ..
அதை யாருக்கும் தெரியாமல்
அவசர அவசரமாய் புரட்டிய போது ..
கடைசி பக்கத்தில் முடிவுரையாய் உன் பெயர் ..