உனக்காக கால்கடுக்க காத்திருக்கையில் நண்பனின் ஆறுதல் வார்த்தை "அவ கண்டிப்பா வருவா மச்சி" நண்பனுக்கு நான் சொல்லும் ஆறுதல் வார்த்தை "வேற என்ன சாப்புடுற மச்சி"
உன் பெயரை வைத்துகொண்டு என்னால் ஒரு கவிதை புத்தகமே தொகுக்க முடியும் .. ஆனால் யோசிக்கிறேன் மற்றவர்கள் படித்தால் அவர் கை படுமே என்று.. நீ அதை வெயில்கால விசிறியாக்கிவிடுவாய் என்று..
உன் பார்வை பிடிக்கும் என்றேன் சிரிக்கிறாய்.. உன் சிரிப்பு பிடிக்கும் என்றேன் வெட்கபடுகிறாய்... உன் வெட்கம் பிடிக்கும் என்பேன் .. என்ன செய்வாய் ? கோவபடுவையா.. உனகே தெரியும் அதுவும் எனக்கு பிடிக்கும் என்று...
என் பக்கத்துக்கு வீட்டு குழந்தையிடம் உனக்கு யாரை பிடிக்கும் என்றேன் அம்மா என்றது... சற்றும் எதிர்பார்கவில்லை உனக்கு யாரை பிடிக்கும் என்று என்னை கேட்டது.. எப்படி சொல்வேன் உன் பெயரை.. என் அம்மா அருகில் அமர்ந்திருக்க
வாரவாரம் கோவிலுக்கு நீ கடவுளை பார்க்கவருகிறாய்... நான் உன்னை பார்க்கவருகிறேன் கடவுள் உன்னிடம் பேசுவதில்லை .. நீ என்னிடம் பேசுவதில்லை .. நம்பிக்கை ஒன்று தான்.. உன்னக்கு கடவுள் எனக்கு காதல்
தாயின் பெயரை எழுதினேன் ஒன்றாம் வகுப்பு தேர்வில் .... தந்தை பெயரை எழுதுகிறேன் .. விண்ணப்ப படிவங்களில் ... ஏனோ உன் பெயரை ஆயிரம் முறை எழுதுகிறேன் .. கையில் சிறு துரும்பு கிடைத்தாலும்..
நானும் உன் வீட்டு கண்ணாடியும் ஒன்றுதான்.. நீ சிரித்தல் நானும் சிரிப்பேன் .. நீ அழுதால் நானும் அழுவேன்... நீ ஒரு கல் எரிந்து பார்.. கண்ணாடி உன் முன் நிற்காது.. நான் நிற்பேன் அதே சிரிப்போடு..
நார்த்திகன் நான்.
வாரம் தவறாமல் கோவிலுக்கு செல்லும் நார்த்திகன் நான்.. நீ வருவாய் என்பதால் .....
தட்டில் சோறுடன் குழந்தையின் பின்னல் ஓடும் தாயாய் போல இதயத்தில் காதலுடன் உன் பின்னல் ஓடி வருகிறேன் ...... தாயோ நிலவை காட்டி சோறு ஊட்டுவாள் .... நான் என்ன செய்ய .... நியே நிலவாய் இருக்க ......