Tuesday, April 27, 2010







just for u

எதிர்காலமும் நிகழ்காலமும்




என் எதிர்காலமும் நிகழ்காலமும்
சந்தித்து கொள்கிறது..
நீ என்னை கடந்து செல்லும்
தருணங்களில் ...............

ஞானபழம்



ஞானபழம் சண்டையில்
நான் இருந்திருந்தால் ..
பிள்ளையார் இருவரை சுற்றிவருவதற்குள் ..
உன் ஒருத்தியை சுற்றிவந்து
நான் ஜெய்திருபேன்..

காத்திருக்கையில்




உனக்காக கால்கடுக்க
காத்திருக்கையில்
நண்பனின் ஆறுதல் வார்த்தை
"அவ கண்டிப்பா வருவா மச்சி"
நண்பனுக்கு நான் சொல்லும் ஆறுதல் வார்த்தை
"வேற என்ன சாப்புடுற மச்சி"

ஒரு பொய் ஒரு மெய்




உனக்காக ஒரு பொய் :
"காதல்" இது உயிர்மெய் எழுத்துகள் அல்ல
இரு உயிர்களின் மெய் எழுத்துகள்.
ஊருக்காக ஒரு மெய் :
ஆயிரம் கவலைகளில்
ஆயிரதோரவது கவலை
காதல்

எனக்காக




எனக்காக உன்னிடம்
பேசட்டுமா என்று கேட்கிறார்..
நான் சவரம் செய்யும் கடைக்காரர் ..
வியாபார நோக்கத்தோடு..

உன்னை பற்றி



தாயின் மடியில் படுத்து கொண்டு
உன்னை பற்றி சொல்வதைபோல்
உணர்கிறேன்
என் தமிழில் உன்னை பற்றி
எழுதுகையில்....


அரிதாய்



அரிதாய் பூக்கும் குறுஞ்சி மலரே
அரிதாய் வழியும் ஆனந்த கண்ணீரே
உங்கள் ஆணவம் அழிந்தது
ஆம் இன்று
அவள் கண்கள் என்னை
பார்த்து விட்டு சென்றன..

நீ !



ஆயிரம் கவிதை
வாசித்திருக்கிறேன்
நான் சுவாசித்த
ஒரே கவிதை நீ !

இரு பொருள் தரும் கவிதை



உன் கண்கள் இரு பொருள்
தரும் கவிதை என்பேன்
அது எனக்கு ஜனனமும் மரணமும்
தருவதால்

போராட்டம்




அழகாள் வென்ற உன்னை
அன்பால் வெல்லவே
இந்த போராட்டம் ...


சேமிப்பு




அதிக செலவு செய்தவன்
சேமிக்க தொடங்கிவிட்டேன்
ரூபாய் நோட்டில் உன் பெயரை
எழுதிவைத்த நாள் முதல்

கவிதை புத்தகம்


உன் பெயரை வைத்துகொண்டு
என்னால் ஒரு கவிதை புத்தகமே தொகுக்க முடியும் ..
ஆனால் யோசிக்கிறேன்
மற்றவர்கள் படித்தால் அவர் கை படுமே என்று..
நீ அதை வெயில்கால விசிறியாக்கிவிடுவாய் என்று..

இஞ்சி வாங்க இரண்டு கிலோமீட்டர்





மதிய வெயிலிலும்
இருபது கடைகளை கடந்து
இரண்டு கிலோமீட்டர் வருகிறேன்..
இரண்டு ரூபாய்க்கு இஞ்சி வாங்க...
உன் வீட்டு பக்கத்துக்கு கடைக்கு...

அட்சயபாத்திரமாய்



அட்சயபாத்திரமாய் என் காதல் ...
என்றும் குறைவதே இல்லை..
அதன் எதிர்பதமாய் உன் இதயம்..
அதில் என் காதல் நிறைவதே இல்லை..

உன் வீட்டை கடக்கும் நேரம்





நான் தினம் வீட்டிற்கு நடந்தே செல்கிறேன்..
பைக்கில் செல்லும்போதும்
நடந்து செல்லும்போதும்
உன் வீட்டை கடக்கும் நேரத்தை கணக்கிட்டபின் ....

பொய்




பொய் சொல்லும் ...
உன் கண்களை நம்புவதைவிட...
பேசாமல் இருக்கும்
கடவுளை நம்பிவிடலாம் ..
என்று நினைக்கிறன் சில நேரங்களில் ...

நிலா ,மலர், மழை





நிலா ,மலர், மழை ,மேகம் ,
இரவு,பகல் ,விண்மீன் ...
இவையாவும் உன்னால் உயிர் பெற்றன.
என் கிறுக்கல்களில்..

வெட்கம்




உன் பார்வை பிடிக்கும்
என்றேன் சிரிக்கிறாய்..
உன் சிரிப்பு பிடிக்கும்
என்றேன் வெட்கபடுகிறாய்...
உன் வெட்கம் பிடிக்கும் என்பேன் ..
என்ன செய்வாய் ?
கோவபடுவையா..
உனகே தெரியும் அதுவும் எனக்கு பிடிக்கும் என்று...


ஏன் தொடர்கிறாய்...



ஏன் என்னை தொடர்கிறாய் என்றாய்...
அந்த கணம் சொல்ல வார்தைவரவில்லை..
என் வாழ்கையின் தொடர்ச்சி நீ தான் என்று..








Saturday, April 17, 2010

யாரை பிடிக்கும்




என் பக்கத்துக்கு வீட்டு குழந்தையிடம்
உனக்கு யாரை பிடிக்கும் என்றேன்
அம்மா என்றது...
சற்றும் எதிர்பார்கவில்லை
உனக்கு யாரை பிடிக்கும் என்று என்னை கேட்டது..
எப்படி சொல்வேன் உன் பெயரை..
என் அம்மா அருகில் அமர்ந்திருக்க

கோவில்



வாரவாரம் கோவிலுக்கு
நீ கடவுளை பார்க்கவருகிறாய்...
நான் உன்னை பார்க்கவருகிறேன்
கடவுள் உன்னிடம் பேசுவதில்லை ..
நீ என்னிடம் பேசுவதில்லை ..
நம்பிக்கை ஒன்று தான்..
உன்னக்கு கடவுள்
எனக்கு காதல்

நிலவும் நீயும்





நிலவின் வளர்பிறை
உன்னை போல் அழகாக வேண்டுமென்ற ஆசை
நிலவின் பொவுர்ணமி
உன் அழகொடு ஒபிட்டு பார்ப்பது ...
நிலவின் தேய்பிறை
அதன் தற்கொலை முயற்சி ...
































Friday, April 16, 2010

உலக அழகி போட்டி




உலக அழகி போட்டிக்கு
நீ மட்டும் சென்று விடாதே ..
உன்னால் ஆண்டுக்கு
ஒரு முறை நடைபெற்ற போட்டி
இனி ஆயுள்க்கு ஒரு முறை என மற்றபடலாம்...


உன் பெயரை மட்டும் ...



தாயின் பெயரை எழுதினேன்
ஒன்றாம் வகுப்பு தேர்வில் ....
தந்தை பெயரை எழுதுகிறேன் ..
விண்ணப்ப படிவங்களில் ...
ஏனோ உன் பெயரை
ஆயிரம் முறை எழுதுகிறேன் ..
கையில் சிறு துரும்பு கிடைத்தாலும்..

நானும் உன் வீட்டு கண்ணாடியும்




நானும் உன் வீட்டு கண்ணாடியும் ஒன்றுதான்..
நீ சிரித்தல் நானும் சிரிப்பேன் ..
நீ அழுதால் நானும் அழுவேன்...
நீ ஒரு கல் எரிந்து பார்..
கண்ணாடி உன் முன் நிற்காது..
நான் நிற்பேன் அதே சிரிப்போடு..


நார்த்திகன் நான்.




வாரம் தவறாமல் கோவிலுக்கு செல்லும்
நார்த்திகன் நான்..
நீ வருவாய் என்பதால் .....

நினைவுகள்




என் நினைவுகளுகெல்லாம்
திடீர் என உயிர் வந்தால்..
உனக்கு நிற்க கூட
இடம் கிடைக்காது ......

லப்டப்





உனக்கு செல்ல பெயர் வைத்துளேன்
"லப்டப்" என்று...
என் இதழ்கள் சொல்ல மறந்தாலும்..
என் இதயம் சொல்ல மறக்காது ... மறுக்காது

சதுரங்கத்தில்



சதுரங்கத்தில் ஏன்
பொய்யாட்டம் ....
உனது புறம் மட்டும்
இரண்டு "ராணிகள்"

பட்டம் பெற்றேன்




படித்தேன் புரியவில்லை
படித்தும் முடிக்கவில்லை
ஆனால் பட்டம் பெற்றேன்
"காதல் தோல்வி" என்று
புத்தகத்தின் அட்டையில்
உன் பெயர்


தேர்தல் நேர தலைவர்கள் சிலை போல்..



தேர்தல் நேர தலைவர்கள் சிலை போல்..
அழகாய் இருக்கிறேன் ..
நீ என்னை கடக்கின்ற..
அந்த ஒரு நொடி மட்டும்..

குழந்தையின் பின்னல் ஓடும் தாயாய் போல :



தட்டில் சோறுடன்
குழந்தையின் பின்னல் ஓடும் தாயாய் போல
இதயத்தில் காதலுடன்
உன் பின்னல் ஓடி வருகிறேன் ......
தாயோ நிலவை காட்டி சோறு ஊட்டுவாள் ....
நான் என்ன செய்ய ....
நியே நிலவாய் இருக்க ......

மறதி



உன்னை பார்த்த நாள் முதல்
மறதி அதிகமாகிவிட்டது ...
உனை மறக்க மட்டும்
மறந்து விடுகிறேன் .....

நாய்குட்டி



என் காதல் கூட
உன் வீட்டு நாய்குட்டி போலத்தான் ..
நீ கோபமாய் விரட்டியதில்லை...
நீ போ என்று சொன்னாலும் ..
உன்னை விட்டு போவதில்லை..

மூளை முட்டாள் என்றது




என் மூளை என்னை முட்டாள் என்றது ..
காரணம் கேட்டேன் ..
நித்தம் அவளை பற்றியே
யோசிக்க நான் எதற்கு உனக்கு என்றது..

மழையில்






மழையில் நனைய பிடிக்கும் என்று சொன்னாய்...
சற்றும் யோசிக்காமல்
மழையில் நனைந்தேன்
நீ குடைக்குள் நின்று கொண்டு சொன்னாய்...என்பதையும் மறந்து..

தாய்மை




ஒவொரு ஆணும் தாய்மை அடைகிறான்
அவனக்கு "காதல்" என்ற
குழந்தை பிறக்கும் போது...