Saturday, April 17, 2010

யாரை பிடிக்கும்




என் பக்கத்துக்கு வீட்டு குழந்தையிடம்
உனக்கு யாரை பிடிக்கும் என்றேன்
அம்மா என்றது...
சற்றும் எதிர்பார்கவில்லை
உனக்கு யாரை பிடிக்கும் என்று என்னை கேட்டது..
எப்படி சொல்வேன் உன் பெயரை..
என் அம்மா அருகில் அமர்ந்திருக்க

கோவில்



வாரவாரம் கோவிலுக்கு
நீ கடவுளை பார்க்கவருகிறாய்...
நான் உன்னை பார்க்கவருகிறேன்
கடவுள் உன்னிடம் பேசுவதில்லை ..
நீ என்னிடம் பேசுவதில்லை ..
நம்பிக்கை ஒன்று தான்..
உன்னக்கு கடவுள்
எனக்கு காதல்

நிலவும் நீயும்





நிலவின் வளர்பிறை
உன்னை போல் அழகாக வேண்டுமென்ற ஆசை
நிலவின் பொவுர்ணமி
உன் அழகொடு ஒபிட்டு பார்ப்பது ...
நிலவின் தேய்பிறை
அதன் தற்கொலை முயற்சி ...



No comments:

Post a Comment