எதிர்காலமும் நிகழ்காலமும்

என் எதிர்காலமும் நிகழ்காலமும்
சந்தித்து கொள்கிறது..
நீ என்னை கடந்து செல்லும்
தருணங்களில் ...............
ஞானபழம்

ஞானபழம் சண்டையில்
நான் இருந்திருந்தால் ..
பிள்ளையார் இருவரை சுற்றிவருவதற்குள் ..
உன் ஒருத்தியை சுற்றிவந்து
நான் ஜெய்திருபேன்..
காத்திருக்கையில்
உனக்காக கால்கடுக்க
காத்திருக்கையில்
நண்பனின் ஆறுதல் வார்த்தை
"அவ கண்டிப்பா வருவா மச்சி"
நண்பனுக்கு நான் சொல்லும் ஆறுதல் வார்த்தை
"வேற என்ன சாப்புடுற மச்சி"
ஒரு பொய் ஒரு மெய்

உனக்காக ஒரு பொய் :
"காதல்" இது உயிர்மெய் எழுத்துகள் அல்ல
இரு உயிர்களின் மெய் எழுத்துகள்.
ஊருக்காக ஒரு மெய் :
ஆயிரம் கவலைகளில்
ஆயிரதோரவது கவலை
காதல்
எனக்காக

எனக்காக உன்னிடம்
பேசட்டுமா என்று கேட்கிறார்..
நான் சவரம் செய்யும் கடைக்காரர் ..
வியாபார நோக்கத்தோடு..
உன்னை பற்றி

தாயின் மடியில் படுத்து கொண்டு
உன்னை பற்றி சொல்வதைபோல்
உணர்கிறேன்
என் தமிழில் உன்னை பற்றி
எழுதுகையில்....
அரிதாய்
அரிதாய் பூக்கும் குறுஞ்சி மலரே
அரிதாய் வழியும் ஆனந்த கண்ணீரே
உங்கள் ஆணவம் அழிந்தது
ஆம் இன்று
அவள் கண்கள் என்னை
பார்த்து விட்டு சென்றன..
நீ !

ஆயிரம் கவிதை
வாசித்திருக்கிறேன்
நான் சுவாசித்த
ஒரே கவிதை நீ !
இரு பொருள் தரும் கவிதை

உன் கண்கள் இரு பொருள்
தரும் கவிதை என்பேன்
அது எனக்கு ஜனனமும் மரணமும்
தருவதால்
போராட்டம்

அழகாள் வென்ற உன்னை
அன்பால் வெல்லவே
இந்த போராட்டம் ...
சேமிப்பு

அதிக செலவு செய்தவன்
சேமிக்க தொடங்கிவிட்டேன்
ரூபாய் நோட்டில் உன் பெயரை
எழுதிவைத்த நாள் முதல்
கவிதை புத்தகம்
என்னால் ஒரு கவிதை புத்தகமே தொகுக்க முடியும் ..
ஆனால் யோசிக்கிறேன்
மற்றவர்கள் படித்தால் அவர் கை படுமே என்று..
நீ அதை வெயில்கால விசிறியாக்கிவிடுவாய் என்று..
இஞ்சி வாங்க இரண்டு கிலோமீட்டர்

மதிய வெயிலிலும்
இருபது கடைகளை கடந்து
இரண்டு கிலோமீட்டர் வருகிறேன்..
இரண்டு ரூபாய்க்கு இஞ்சி வாங்க...
உன் வீட்டு பக்கத்துக்கு கடைக்கு...
அட்சயபாத்திரமாய்

அட்சயபாத்திரமாய் என் காதல் ...
என்றும் குறைவதே இல்லை..
அதன் எதிர்பதமாய் உன் இதயம்..
அதில் என் காதல் நிறைவதே இல்லை..
உன் வீட்டை கடக்கும் நேரம்

நான் தினம் வீட்டிற்கு நடந்தே செல்கிறேன்..
பைக்கில் செல்லும்போதும்
நடந்து செல்லும்போதும்
உன் வீட்டை கடக்கும் நேரத்தை கணக்கிட்டபின் ....
பொய்

பொய் சொல்லும் ...
உன் கண்களை நம்புவதைவிட...
பேசாமல் இருக்கும்
கடவுளை நம்பிவிடலாம் ..
என்று நினைக்கிறன் சில நேரங்களில் ...
நிலா ,மலர், மழை

நிலா ,மலர், மழை ,மேகம் ,
இரவு,பகல் ,விண்மீன் ...
இவையாவும் உன்னால் உயிர் பெற்றன.
என் கிறுக்கல்களில்..
வெட்கம்

உன் பார்வை பிடிக்கும்
என்றேன் சிரிக்கிறாய்..
உன் சிரிப்பு பிடிக்கும்
என்றேன் வெட்கபடுகிறாய்...
உன் வெட்கம் பிடிக்கும் என்பேன் ..
என்ன செய்வாய் ?
கோவபடுவையா..
உனகே தெரியும் அதுவும் எனக்கு பிடிக்கும் என்று...
ஏன் தொடர்கிறாய்...

ஏன் என்னை தொடர்கிறாய் என்றாய்...
அந்த கணம் சொல்ல வார்தைவரவில்லை..
என் வாழ்கையின் தொடர்ச்சி நீ தான் என்று..



No comments:
Post a Comment